மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவு காத்தான்குடி நகரில் திங்கள்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற 16 வயது
மாணவியொருவர் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி – 4, குபா பள்ளி வீதியைச் சேர்ந்த காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் நஜிமுதீன் பாத்திமா தஸ்னிகா (வயது 16) என்ற மாணவி வழமை போன்று திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்றார்.
ஆயினும், திங்கட்கிழமை பாடசாலை முடிந்து ஏனைய பிள்ளைகள் வீடு திரும்பிய போதும் தமது மகள் செவ்வாய்க்கிழமை (ஜுலை 19, 2016) காலை வரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, பாடசாலை சீருடையுடன் வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த மாணவி திங்கட்கிழமை பாடசாலைக்குச் சமுகமளிக்கவில்லை பாடசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். மாணவி பற்றிய தகவல்களை அறிந்தால் காத்தான்குடி பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் நிலையம் 0652246595, மாணவியின் தந்தை நஜிமுதீன் 0775161797
0 Comments:
Post a Comment