31 Jul 2016

மூ.கோவின் அகவை 50 நூல் வெளியீடு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மூ.கோ. என அழைக்கப்படும் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்களின் அகவை 50 எனும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (30) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள வெற்றிகலோ ஹொலிடே றெஸ்டூரன்றில் நடைபெற்றது.
பொன்.செல்வநாயகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், உட்பட வைத்தியர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச அரச சார்பற்ற உத்தியோகஸ்தர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மூ.கோ வின் சமூக சேவைகள் தொடர்பில் பலரும் உரையாற்றியதோடு அவருக்கு பொன்னாடைகள் போர்த்தியும், வாழ்த்து மடல்கள் வழங்கியும் கௌரவத்தினை வழங்கினர்.






























SHARE

Author: verified_user

0 Comments: