17 May 2016

விருது வழங்கலுக்கான விண்ணப்பங்கள் கோரல்

SHARE
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இலக்கிய விழா 2016 ஐ முன்னிட்டு விருது வழங்கலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலக்கிய நூல் விருது, வித்தகர் விருது, இளம் கலைஞர் பாராட்டு மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.
இலக்கிய விருத்துக்கு சுயமாக எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், சிறுவர் இலக்கியம், அறிவியலும் தொழில்நுட்பமும், புலமை மற்றும் அறிவுசார் படைப்புக்கள், நானாவித விடய நூல்கள், மொழிபெயர்ப்புக்கள் (தமிழ்) என்பன ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அனுப்பப்படும் நூல்கள் 2015 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் வௌியிடப்பட்டவையாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: