செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட, தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன. தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப்
பெறமுடியும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணைத் திறப்பு விழா,
சனிக்கிழமை
(09) (09) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'நாங்கள் தற்போது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். நாடாளுமன்றம், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21 பேரடங்கிய வழிநடத்தல் குழு நிர்ணயிக்கப்பட்டு, அதனுடைய முதல் அமர்வு இடம்பெற்று, இம்மாதம் 28ஆம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூட இருக்கிறது. அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள், கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
பிரேமதாஸ காலத்தில், சந்திரிகா காலத்தில், ரணில் காலத்;தில், மஹிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வ கட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. தற்போதும் தமிழ் மக்கள் பேரவை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வடமாகாகண சபை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள்.
அரசியல் சாசன குழு என்பது, பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம். இதுபோன்ற நிலையில், மக்களுடைய கருத்துக்களை அறியும் வகையில் மக்களைச் சந்தித்து, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசாங்கத்துக்குக் கொடுக்க இருக்கிறார்கள்' எனக் கூறினார்
இன்றைய சூழலில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பிரிக்கப்படாத ஒற்றுமையான இலங்கை நாட்டுக்குள் முழுமையான விசுவாசமான இறைமையின் அடிப்படையில் அழிக்கப்படுகின்ற அதிகாரப் பிகிர்வின் ஊடாக, விசேடமாக வடக்குக் கிழக்கில் வாழுக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிறப்புரிமை உறுதி செய்யப்பட்டு, சமமாக, சமத்துவமான சமாதானமாக வாழக்கூடிய அடிப்படையை எமது மக்கள் அங்கிகரித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஏற்படுகின்ற தீர்வு, உறுதியான, நிலை நிற்கக் கூடிய அரசியல் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனை முன்வைத்துத்தான் நாமும் பயணத்துக் கொண்டிருக்கிறோம். அந்தத் தீர்வு, விரைவில் ஏற்பட வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு, விசேடமாக, தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக நிற்கவேண்டியது அவசியம். எங்களுடைய பலம் ஒற்றுமையில் தான் தங்கியிருக்கிறது. அதே விதமாக முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது நீங்களும் ஒற்றுமையாக, ஒருமித்து நிற்க வேண்டும்.
உங்களுடைய பலமும் அதில் தான் இருக்கிறது. இரண்டுக்கும் மேலாக, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒருமித்து நிற்க வேண்டும். அந்த அதிகாரப் பகிர்வின் பெறுமதியை நாங்கள் முழுமையாகப் பெற வேண்டுமாக இருந்தால் தமிழ் முஸ்லிம் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும்' என குறிப்பிட்டார்.
'செல்வநாயகம்,
டட்லியுடன் செய்த ஒப்பந்தமும். பண்டா - செல்வா ஒப்பதந்தத்தினையும் தமிழ் மக்களுக்காக மட்டும் செய்யவில்லை, தமிழ்பேசும் மக்களுக்காகச் செய்தார். 1987ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியுடன் ஜெயவர்த்தனாவால் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழ் பேசும் மக்கள் என்றுதான் செய்தார்கள்.
தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்றுதான் செய்தார். அஷ்ரப்பின் காலத்தில் இந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்களுடன் பேசியிருக்கிறோம். நாங்கள் சில ஒப்பந்தங்களுக்கு
வந்திருக்கிறோம்.
நீண்ட பேச்சுக்களுக்குப்பின்னர், சந்திரிகாவினால் 2000 களில் முன்வைக்கப்பட் பிரேரணைகளில் அஸ்ரப் உயிருடன் இருந்த காலத்தில் பேசப்பட்ட விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.
அந்த விடயத்தினைப் பொறுத்தவரையில், பல கருமங்களில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களுடைய உடன்பாடுகள் இப்போதும் பிரதிபலிக்கின்றதாக இருந்திருக்கின்றன. ஆகவே நீதியில், உண்மையில் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியடத்தில், தமிழ், முஸ்லிம்கள் பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். ஆகவே, ஒருமித்த ஒற்றுமையினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எங்களது கடமை எதிர்வரும் காலத்தில் தற்போதைய நிலைமை தொடர்ந்தும் முன்னேறுகின்றதாக இருக்க வேண்டும்.
தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வரவேண்டும். ஜனாதிபதி இந்தக் கருமத்தில் உறுதியாக இருக்கிறார். பிரதமரும் அரசாங்கமும், இந்தக் கருமத்தை நிறைவேற்றுதல் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக நம்புகிறோம் ஆகவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாங்கள், எவருக்கும் அநீதி நடைபெறுவதை அனுமதிக்காமல் செயற்பட வெண்டும். அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
0 Comments:
Post a Comment