7 Apr 2016

பாலம் ஒன்றின் கீழ் அடையாளம் காணமுடியாத நிலையில் சடலம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு காட்டுப் பாலத்தடி எனும் இடத்திலுள்ள பாலத்திற்குக் கீழ் சடலம் அடையாளம் காணப்படாத
நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாலத்திற்குக் கீழ் சடலம் ஒன்று கிடப்பதாக வியாழக் கிழமை (07) மாலை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் இக்குறித்த பாலத்திற்கு கீழ் நீரில் அமிழ்ந்த நிலையில், சடலத்துடன் துவிச்சக்கரவண்டி ஒன்றும் கிடப்பதை,
அவதானித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றதும் சடலம் மீட்கப்படும் எனவும், அதுவரையில் குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: