3 Mar 2016

கதுறுவெலையிலிருந்து கல்முனை நோக்கி வந்த தனியாா் பஸ் வண்டி குடைசாய்ந்தது

SHARE
(DILA)

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-பொளன்னறுவை கொழும்பு பிராதான வீதியின் வெலிகந்த பிரதேசத்திற்கு அருகாமையில் தனியார் (பேருந்து) பஸ் வண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி விபத்துக்குள்ளான பஸ் வண்டி கதுறுவெலையிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக கல்முனை நோக்கி பயணித்த வேலையிலே குடை சாய்ந்துள்ளது.

இதனால் குறித்த பஸ் வண்டியில் பயணித்த சுமார் 40பேர் காயமடைந்த நிலையில் பொளன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்துச் சம்பவம்; இன்று 02 புதன்கிழமை மாலை சுமார் 4.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்திற்கு விரைந்த வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: