3 Mar 2016

கள்ளச் சாராயம் விற்ற குடும்பஸ்தர் கைது

SHARE
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள கிட்டங்கி வீதி, நற்பிட்டிமுனையில் சட்டவிரோதமாக சாராயம் விற்றதான குற்றச்சாட்டின் பேரில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேக நபர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கும் இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பொலிஸார் அவரிடம் இருந்து 180 மில்லி லீற்றர் சாராயத்தையும் கைப்பற்றினர்.
கிட்டங்கிவீதி நற்பிட்டிமுனை 2 ஐச் சேர்ந்த தம்பி முத்து ராசகுமார் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: