(க.விஜி)
கல்லடி விவேகானந்த மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் வெளியாகியுள்ள க.பொ.த.(சா/த)பரீட்சை (2015) பெறுபேற்றில் கடந்த வருடத்தைவிட முன்னணி வகிக்கின்றார்கள் என வித்தியாலய முதல்வர்
திருமதி .திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்...2015 ம் ஆண்டிக்கான க.பொ.த.(சா/) பரீட்சையில் இவ்வருடம் இரண்டு மாணவிகள் 9Aசித்திகளையும்,நான்கு மாணவிகள் 8A சித்திகளையும், இரண்டு மாணவிகள் 7Aசித்திகள் உட்பட இன்னும் பலமாணவிகள்சித்தியடைந்துள்ளனர்.
கடந்த வருடம் 59 வீதம் க.பொ.த.(உ/த)கற்பதற்கு தகுதி பெற்றனர்.ஆனால் இவ்வருடம் 64% மானோர் க.பொ.த.(உ/த)கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.பாடரீதியாகவும் மாணவிகள் சித்தியடைந்துள்ள வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரீட்சைக்கு தங்களின் அர்ப்பணிப்பான ஆசிரியசேவையை புரிந்த ஆசிரியர்களுக்கும்,பாடசாலையின் வளர்ச்சியில் கவனம் கொண்ட அதிபர்கருக்கும்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கும் பெற்றோர்கள் மணமார்ந்த நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
0 Comments:
Post a Comment