தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் சந்திரகாந்தன் உட்பட நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) மற்றும் ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) மற்றும் கலீல் எனப்படும் இராணுவ புலனாய்வுத்துறையை சேர்ந்த ஆகியோர் கைது செய்யப்பட்னர்.
அக்டோபர் 11ம் திகதி சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான் ) கைது செய்யப்பட்டார்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நால்வரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 27ம் ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment