24 Dec 2015

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்துவதற்குமுதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SHARE
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்ட விவாதம் புதன்கிழமை (3) நடைபெற்றபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.   இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பட்டிருப்புத்தொகுதியில் அதிகளவான மக்கள் செறிந்துள்ள பிரதேசம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைப்; பிரிவாகும் எனவே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச சபையை நகர சபையாக அறிவிப்பதற்குரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும்' என்றார். 

மேலும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பிரதான வீதியை அண்டியிருக்கும் பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபையை எடுத்துக் கொண்டால் அவற்றின் சபைகளை நடத்தக்கூடியளவுக்கு வருமானம் ஈட்டக்கூடியதாக இருக்கின்றது.' எனவும் அவர் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: