30 Oct 2015

விவசாய அபிவிருத்தித் திணைக்களம் நடாத்தும் செயலமர்வு

SHARE
விவசாய அபிவிருத்தித் திணைக்களம் UNDP நிறுவனத்துடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களுக்கு நடாத்தும் ஒருநாள் செயலமர்வு எதிர்வரும் 02.10.2015 திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு கல்முனை பிரதேச செயலகம் தமிழ்ப் பிரிவில் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இதன்போது ஆராயப்படவுள்ளது. விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளினால் இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படவுள்ளன.

நாட்டின் விவசாயத்துறையை முன்னோக்கிக் கொண்டுசெல்வதில் விவசாய திணைக்களம் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. அதேபோன்று கிராம மட்டங்களில் பணியாற்றிவரும் அரச உத்தியோகத்தர்களும் அர்பனிப்புடன் சேவையாற்றிவருகின்றனர். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வில் கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைகுடியிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: