30 Oct 2015

எம்மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாமை காரணமாகவே சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்.

SHARE
(இ.சுதா )


சிறுவர் உரிமையினை அனுசரித்து அதற்கு ஏற்றவகையில் சிறுவர்களுக்கு பாது காப்பினை வழங்குவதன் மூலமாக சிறந்த மாணவர் சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும். மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றும் வகையில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமாக முரண்பாடுகளற்ற சூழலை ஏற்படுத்த முடியும். என மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்திப் தெரிவித்துள்ளார்.

வியாழக் கிழமை  (29) மருதமுனை அல்மன்னார் மத்திய கல்லூரியின் கல்வி பொதுத்தர உயர்தர பிரிவு  மாணவர்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய கிளை ஏற்பாடு செய்த சிறுவர் உரிமைகளும் பாதுகாப்பும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வுக்; கருத்தரங்கில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்  அவர்; இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்…… இன்றைய கால கட்டத்தில் சிறுவர் தொடர்பான பல பிரச்சினைகள் நடைபெற்று வருவதனை நாம் அறிகின்றோம். 

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய நிலைமையினை உருவாக்க ஒவ்வொரு மாணவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எம்மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாமை காரணமாகவே சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர். 

இதனை எதிர் காலங்களில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை துரிதமான முறையில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் நாமும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டிய தேவையுள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பாக மாணவர்கள் விழிப்பாக இருப்பதுடன் பாடசாலை ஒழுக்க விழுமியங்களை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டதுடன்.மாணவர் எதிர் கொள்கின்ற உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆலோசணைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

SHARE

Author: verified_user

0 Comments: