10 Oct 2015

சாதனையாளர் பாராட்டுவிழா

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனையின்கீழுள்ள போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள சாதனையாளர் பாராட்டுவிழா வியாழக்கிழமை வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் போரதீவுப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை (08) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.எம். சார்ள்ஸ் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.என்.புள்ளநாயகம், களுவாஞ்சிகு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மட்டக்களப்பு ககச்சேரியின் உதவித் திட்டமிடல் பணிப்பளார் ஆ.சுதாகரன் மற்றும், அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கோட்டக்கல்வி நிருவாகப் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் சேவையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாட இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் கோட்ட இவ்வலய, மாவட்ட மாகாண தேசிய ரீதியாக சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



























SHARE

Author: verified_user

0 Comments: