10 Oct 2015

கொக்கட்டிச்சோலையில் சிறுவர், முதியோர் பேரணியும், கௌரவிப்பும்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்து கோசமிட்டும், பதாதைகளை கையில் ஏந்தியும் பேரணிஒன்று  வியாழக்கழமை (08) இடம்பெற்றது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது பட்டிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தைச் சென்றடைந்தது. பின்னர் அங்கு முதியவர்களின் நடனநிகழ்வும், சிறுவர்களது நாடகம், நடனம், கவிதை போன்றனவும் நடைபெற்றது.

மேலும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய அம்பிளாந்துறை, கடுக்காமுனை ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும் அதனை பயிற்றுவித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: