8 Oct 2015

காட்டு யானைகள் தங்கியிருக்கும் பற்றைக்காடழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானைகள் தங்கி நிற்கும் பற்றைக் காடுகளை அழிக்கும் நடவடிக்கை செவ்வாய்க் கிழமை (06) மாலை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நடவடிக்கைகள் இப்பிரதேசத்தின் விவேகானந்தபுரம் கிராமத்தில் ஆரம்பமானது.

போரதீவுப்பற்று பிரதேசத்தல் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புக்களிலுள்ள பற்றைக்காடுகளே இவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன. 

போரதீவுப்பற்று பிரதேச செயலகம், போரதீவுப்பற்று பிரதேச சபை, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன விலங்கு இலாகா, மட்டக்களப்பு கச்சேரி, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும், இராணுவத்தினர், போன்ற அரச அமைப்புக்கள் ஒன்றிணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் பொதுக்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பிலுள்ள பற்றைக் காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்நிலையில் காட்டு யானைகளைப் பிடித்துக் கொண்டு சரணாயலத்தில் விடுவதற்காக அனுரதபுரத்திலிருந்து விசேட குழுவென்றும் செவ்வாய் கிழமை மாலை இப்பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.

இப்பிரதேச மக்கள் எதிர் கொள்ளும் காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு மிகவிரைவில் முடிவு எட்டப்படும் எனவும் பிரதேச செயலாளர், மேலும் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: