26 Oct 2015

15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மைதானங்கள் அபிவிருத்தி

SHARE
(டிலாறா)

15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அம்பாரை மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் இதற்கான நிதி ஒதுக்கீட்டினை செய்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. தற்போது முதலாம் கட்டமாக கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், இறக்காமம், கல்முனை பற்றிமா கல்லூரி விளையாட்டு மைதானம் போன்ற மைதானங்களின் அபிவிருத்திக்கென இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக நற்பிட்டிமுனை, நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி போன்ற மைதானங்களும் இன்னும் தமிழ்,சிங்கள பிரதேசங்களில் உள்ள பொது மைதானங்ளும் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

கல்முனை சந்தாங்கேணி மைதானம் சர்வதேச தரத்திலான மைதானமாக தரம் உயர்த்தப்படுவதோடு அதன் ஆரம்பகட்ட வேலைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. சில உள்ளக விளையாட்டு அரங்குகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: