26 Sept 2015

நேரம் தாழ்த்தி வந்தார் - வெள்ளிமலை

SHARE
அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் கட்டப்பட்ட புதிய நோயாளர் விடுதியைத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட நேரதிலிருந்து இந்நிகழ்வின் இறுதிநிகழ்வான முதலமைச்சரின் உரை இடம்பெறும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) கலந்து கொண்டார்.

இதனால் இந்நிகழ்வில் விடுதியைத் திறந்து வைக்கவோ, மங்கல விளக்கேற்றவோ, உரையாற்றவோ வெள்ளிமலைக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

முதலமைச்சரின் உரையினைத் தொடர்ந்து நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

SHARE

Author: verified_user

0 Comments: