உல்லாசப் பயணிகள் விசாவில் வந்து சட்ட விரோதமாகத் தங்கியிருந்து விற்பனையிலும் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு கல்முனையிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா பெங்கழூரைச் சேர்ந்த மகி அக்கபாளி (வயது 30), தானிக் நவீன்குமார் (வயது 22), அக்கபாளி தேவராஜ் பிரகல்லாதன் (வயது 33), ஆயக்குட்டு சிவகுமார் (வயது 31) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இலங்கையில் விற்பனைக்கு அனுமதி பெறப்படாத ஒரு தொகை சட்டவிரோத விற்பனைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான அப்துல் கப்பாரின் நெறிப்படுத்தலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதான இந்திய பிரஜைகளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.
0 Comments:
Post a Comment