7 Jul 2015

விபத்து - பெண் பலி, மூவர் படுகாயம்

SHARE

வாழைச்சேனை - கும்புறுமூலை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். 

உயிரிழந்தவர் வாழைச்சேனையை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

இந்த ஆசிரியை தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மட்டக்களப்புக்கு சென்றுவிட்டு, முச்சக்கர வண்டியில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். 

இதன்போது வழியில் மாடொன்று குறுக்கறுத்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

சம்பவத்தில், காயமடைந்த நால்வரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆசிரியையும் அவரது கணவரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆசிரியை மரணமடைந்துள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
SHARE

Author: verified_user

0 Comments: