9 Jul 2015

பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில்

SHARE

ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது என பிரதி தேர்தல் ஆணையாளர்  எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
அரசாங்க ஆசிரியர்களின் தபால் மூல வாக்களிப்பு 3 ஆம் திகதி நடைபெறும். கல்வி வலய காரியாலயங்கள், கல்விப் பிரிவு அலுவலகங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் உரிய அதிகாரிகளிடம் எதிர்வரும் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரதி தேர்தல் ஆணையாளர் - தபால் மூல வாக்காளர்களின் பெயர்பட்டியல் பொறுப்பாதிகாரிளினால் இம்மாதம் 22 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் தபால் மூல வாக்குகள் அடங்கிய பொதிகள் பாதுகாப்பாக வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கை இம்மாதம் 24 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: