8 Jul 2015

மட்டு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி

SHARE

ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் , பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன. அதன்படி, மட்டக்களப்பில் 199 நிலையங்களும், கல்குடாவில் 115 நிலையங்களும்,    பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 26 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனையை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்தையடுத்து  2015 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 5 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று காலை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுத்தாக்கல் நேற்றைய தினம் 6 ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் 13 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வேட்பு மனுத்தாக்கலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர், அல்லது அதிகாரமளிக்கப்பட்ட முகவர், அவரால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அடங்கலாக 3 பேர் மாத்திரமே வேட்பு மனுத்தாக்கல் செய்யும் மண்டபத்தினுள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வேட்புமனுத்தாக்கல் தொடர்பான அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: