16 Jun 2015

அம்பாரையில் NVQ தராதரமுள்ள குழாய் பொருத்துனர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி

SHARE


-எம்.எஸ்.எம். சறூக்-


இலங்கையில் தகுதி பெற்ற குழாய் பொருத்துனர்களுக்கு பாரியதோர் பற்றாக்குறை நிலவூகிறது. இதனை கருத்திற் கொண்டு நிலையானதொரு நீர் வழங்கல் முறைமையை  உருவாக்குவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நாடு பூராகவூம் குழாய் பொருத்துனர்களுக்கான பயிற்சி நெறிகளை நடாத்தி அவர்களை பதிவூ செய்யூம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒர் அங்கமாக கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட NVQ  தராதாரமுள்ள குழாய் பொருத்துனர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை துறைசார்ந்த வளவாளர்களை கொண்டு அம்பாரை நகர மண்டபத்தில்  சனிக்கிழமை (13) இடம் பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு பிராந்திய சேவைகள் மத்திய நிலையத்தின் பிரதம பொறியியலாளர் எம்.கே.முசாஜித் கலந்து கொண்டு இப்பயிற்சி நெறியின் முக்கியத்துவம் தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

திருகோணமலைஇ மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 35 NVQ தராதாரமுள்ள குழாய் பொருத்துனர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.

இதன்போது இறுதியில் எழுத்து மூலமான ஒரு பரீட்சையும் அம்பாரை ஹாடி தொழில் நுட்ப கல்லுரியில் செய்முறை பயிற்சியும் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்











SHARE

Author: verified_user

0 Comments: