27 Jun 2015

கல்லடி வட்டை, பள்ளத்துச் சேனையில்… கிழக்கு விவசாய அமைச்சர் மக்கள் சந்திப்பு.

SHARE

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவித்தி, அமைச்சர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தின், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடிவட்டைக் கிராமத்திற்குச் ஞாயிற்றுக் கிழமை (21 சென்று) மக்கள் சந்திப்பில் கலந்து ஈடுபட்டார்.

இதன்போது கல்லடி வட்டடை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், ஏனைய கிராம பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அக்கிராமத்தின் முக்கிய பிரச்சினைகளான முறுத்தானைக் கிராமம் தொடக்கம், 46வில் குளத்திற்கிடையிலான வாய்க்காலை புணருத்தாரணம் செய்தல், ஜிம்கலி அணைக்கட்டை புணரமைத்தல், குடிநீர்ப்பிரச்சனைக்குத் தீர்வு காணல், போன்றன பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு தருமாறு மேற்படி கிராம பொதுமக்களால் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள 46வில் குளம், ஜிம்கலி அணைக்கட்டு, காணந்தனை அணைக்கட்டு, எவ்வைப் பாளம் போன்ற இடங்களையும், அமைச்சர் நேரில் சென்று பார்வையிடப்பட்டன.
மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மேற்கொள்ள முடியுமான தீர்வுகள், மாகாணசபையூடாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகள், மற்றும் நாட்டு அரசியல் சூழல்கள் அந்த சூழல்களின் மத்தியில் எமது வடக்கு கிழக்கு மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் போன்றன தொடர்பாக அமைச்சர் இதன்போது மக்களுக்கு விளக்கமளித்தார். 
















SHARE

Author: verified_user

0 Comments: