மக்கள் பங்களிப்புடன் பாதை திருத்தும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நெடுஞ்சேனை எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளை, ஒக்ஸ்பாம், நிறுவனத்தின் அனுசரையில் மேற்கொள்ளப்படும் காசுக்கான வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
தங்கள் வீதியைத் தாங்களே புனரமைப்பு செய்வதற்கும் நீர் வழிந்தோடும் வடிகான்களை வெட்டுவதற்கும் உரிய சந்தர்ப்பத்தை வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள் இணைந்து காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளனர்.
இக்கிராமத்து மக்கள் மாரிமழைக்காலங்களில் பல்வேறு வழிகளில் வெகுவாகப் பாதிக்கப் படுகின்றனர். இவற்றுள் முக்கியமானது போக்குவரத்து சீரழிந்து போவது. இவர்களுக்கான பிரதான போக்குவரத்து வீதி ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தில் மூழ்குவதும் சேதமுறுவதும் வழக்கம். இதனால் வேலை தேடிச் செல்வதிலும் வைத்திய தேவைகளுக்காக வெளியே செல்வதிலும் பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதிலும் மிகவும் சிரமங்களை இம்மக்கள் அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment