மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் சனிக்கிழமை (11) நடாத்திய விருதளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாமுக்கு அவ்விளாவிற்குச் செல்வதற்குரிய அனுமதியை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் மறுத்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார்.
இவ்வியைடம் தொடப்பில் மேலும் மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தொலை நகல் மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…..
தங்கள் சங்கத்தினால் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் 2015.04.11 ஆம் ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறும் விருதழிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக வருகைதர சம்மதம் தெரிவித்திருந்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நான்கு துறைகளில் முதன் நிலை பெற்ற மாணவர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் முதல் மூன்று இடங்கைளபை; பெற்ற மாணவர்களையும், க.பொ.த சாதாரண் பரீட்சையில் சித்த பெற்ற மாணவர்களையும், ஏனைய இதர செயற்பாடுகளில் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் இவ்வைபவத்தில் என்னை பிரதம அதிதியாக அழைத்து எனது கைகளால் அச்சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசழிக்கும் பாக்கியத்தை வழங்கியமைக்காக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
எனினும் இம்முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் நான் கலந்து கொள்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் மறுத்துள்ளதால் இவ்வரலாற்று முக்கியத்துவம் மிக்க வைபவத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாமையையிட்டு நான் கவலைடைகின்றேன்.
மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கைகளினால் பரிசு வாங்கக் காத்திருக்கும் சாதனை படைத்த மாணவர்களிடம் நான் மன்னிப்புக் கோருவதாக அறிவிக்குமாறு வேண்டுகிறேன். என அக்கடித்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர் செயலகம், கல்வியமைச்சர், பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment