இவ் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தில் உள்ள16 கிராமசேவகர் பிரிவுகளிலும்
கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஒத்துழைப்புடன், கிராம சேவகர்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
ஆகியோரின் பிரதான பங்களிப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை (10) அபிவிருத்தித்
திட்டங்கள் ஆரப்பித்து வைக்கப்பட்டன.
.காயாங்கேணி வன்னிச்சிநகர் வீதிக்கு
கொங்கிறிட் இடல், வன்னிச்சி நகர் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல்
நாட்டல், வட்டவான் இறாலோடை வீதிக்கு கொங்கிறிட்ட இடல் ,மாங்கேணி தெற்கு
பிரப்பையடிமடு வீதிக்கு கொங்கிறிட் இடல், கல்வெட் இடல், பனிச்சங்கேணி
பிள்ளையார் கோவில் வீதிக்கு கல்வெட ;இடல், மாங்கேணி மத்தி ஆலய வீதிக்கு
கொங்கிறிட் இடல், புணானை கிழக்கு வாலமன் கேணி வீதிக்கு கொங்கிறிட் இடல்
,கிரிமிச்சை பாடசாலை வீதிக்கு கொங்கிறிட் இடல், மதுரங்குளம் வீதிக்கு
கல்வெட் இடல், ஊரியன்கட்டு தட்டுமுனை உள் வீதிக்கு கல்வெட் இடல்,வாகரை
மத்தி அழகாபுரி விதிக்கு கல்வெட் இடல் மற்றும் கொங்கிறிட் இடல், 5ஆம் வாட்
பாடசாலை வீதிக்கு கொங்கிறிட் இடல்,கோமத்தலாமடு பொதுவிளையாட்டு
மைதானத்திற்கு கிறவலிடல், பால்சேனை பலநோக்கு மண்டபத்தினை புனரமைத்தல் ,
புச்சாக்கேணி கதிர்காமர் வீதிக்கு கொங்கிறிட் இடல், கதிரவெளி ராமகிருஸ்னன்
வீதிக்கு கொங்கிறிட் இடல் ஆகிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து
வைக்கப்பட்டன.
கோரளைப்பற்று பிரதேச செயலாளர் செல்வி
எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பாராளுமன்ற
உறுப்பினர் சீயோகேஸ்வரன் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன், உதவித்
திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், கிராம சேவையாளர்கள் பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment