17 Apr 2015

சிறந்த அபிவிருத்திக்கு ஆரோக்கியமான குழந்தைகள் தேவை

SHARE
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நாட்டில் நல்ல அபிவிருத்தியை திட்டமிடுவதாக இருந்தால் உடல் உள ஆரோக்கியமும் வளர்ச்சியும் பெற்ற சமூகம் இருத்தல் வேண்டும் அதற்கு ஆரோக்கியமான குழந்தைகளே தேவை என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிணி தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் திட்டத்தின் மாவட்ட நிகழ்வு இன்று (16) பகல் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் இவ்வாறு தெரிவித்தார்.அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியொகத்தர்கள், சுகாதார வைத்திய மாதுக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கர்ப்பிணித்தாய்மார்களுக்கான 2000 ரூபா பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.குழந்தை கருவுற்று 4 மாதங்கள் முதல் பிள்ளை பிறந்து 4 மாதங்கள் வரையில் வழங்கப்படும் வகையில் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தில் காத்தான்குடியில் 604 தாய்மார்களுக்கு இப் பொதிகள் வழங்கப்படுகின்றன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாகவும் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசீர்டீன் ஆகியோரும் அதிதிகளாகக்கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: