மட்.களுவாஞ்சிகுடி விநாயக வித்தியாலயத்தின் 2013 ஆம், 2014 ஆம்
ஆண்டுகளுக்கான பரிசழிப்பு விழா வியாழக்கிழமை (09) களுவாஞ்சிகுடி
இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் த.கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கடந்த 2013, 2014 ஆம் ஆண்டுகளில் கணிதம், விஞ்ஞானம், சுற்றாடல், தமிழ் தினப்போட்டி, விளையாட்டு, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, போன்ற பல விடையங்களில் திறமைகளை வெளிக்காட்டிய 250 மாணவர்கள் பரில்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன், மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிகழ்வை வித்தியாலய மாணவர்களின் கலை நயங்களும், மிகச் சிறப்புற அலங்கரித்தன.
0 Comments:
Post a Comment