மட்டக்களப்பு
மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசத்தின் 100 நாள் விசேட
அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்தி
செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான ஆரம்ப நிகழ்வு பண்டாரியாவெளி
கிராம சேவக பிரிவு படையாண்டவெளியில் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா
வில்வரத்தினம் அவர்களின் தலைமையில் இன்று (16) காலை 10 மணியளவில்
இடம்பெற்றது.
இதன் போது இக் கிராமத்தின் வேலைத்திட்டமான
நாகதம்பிரான் கோயில் வீதிக்கு கொங்கிறீட் இடுதல் சம்பிரதாய முறைப்படி சமய
அனுஸ்டானங்களுக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் அவர்கள்
ஆரம்பித்து வைத்ததுடன் அபிவிருத்தி பணிகள் அவற்றில் மக்களின் பங்களிப்பு,
இளைஞர்களின் எதிர்காலம், பிள்ளைகளின் கல்வி போன்றவற்றை கருப்பொருளாக
கொண்டதான சிறந்த உரையும் நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி
திட்டமிடல் பணிப்பாளர் எஸ் பிரபாகரன், வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை
வங்கிச் சங்க வலய முகாமையாளர் சீ.ரவீந்திரன், பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள், ஆலய குருமார், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம
அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என
பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 Comments:
Post a Comment