12 Jan 2015

தலிபான்களின் தாக்குதலுக்கு பின்னர் பெஷாவர் பாடசாலை இன்று மீள்திறப்பு

SHARE
தலிபான்களின் அகோர தாக்குதல்களுக்கு உட்பட்டு பாரிய உயிரிழப்புக்களை தாங்கிய பெஷாவர் பாடசாலை சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் தற்போது மீள திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பெஷாவர் பாடசாலையில் தலிபான்கள் உட்புகுந்து பாரிய தாக்குதல்களை நடத்தி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட்ட 150 பேரை கடந்த மாதமளவில் கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்களது பச்சை நிற சீருடையுடனும் பெற்றோர்கள் மாணவர்களை கொண்டு வந்து பாடசாலைகளில் விட்டு விடுவதுமாக சுமார் ஒரு மாதம் விடுமுறையை கழித்து மாணவர்களும் பாடசாலை சூழலும் ,இன்று திங்கட்கிழமை அமைந்திருப்பதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதல்களை நினைவுகூரும் முகமாக விழாவொன்று நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வார கடைசிதினம் வரை அத்தினமே கொண்டாடப்படவுள்ளது. கல்விநடவடிக்கைகள் குறைவாகவே நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE

Author: verified_user

0 Comments: