26 Dec 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பே சிவம் அமைப்பின் நிவாரண உதவிகள்.

SHARE
(தில்லை)

அண்மைக்காலமாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள  கிராமங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.


அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள துறைவந்தியமேடு எனும் கிராமம் எந்தவிதமான தரைவழிப்பாதைகள் இன்றி நீரினால் சூழப்பட்ட நிலையிலே அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

இவர்களது போக்குவரத்திற்கு தற்போது வள்ளங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அவர்களது நிலைமை அறிந்து அன்பே சிவம் அமைப்பினுடாக அந்தக்கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை துறைவந்திமேடு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கட்டடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் செயலாளர் புவி அன்பே சிவம் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.

தற்போது நாட்டிலே பல பகுதிகளிலும் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சொல்லொன்னா துன்பதுயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். அவர்களுக்கான நிவாரணங்களை புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் சில அமைப்புக்கள் மூலம் வழங்கி வருகின்றது.

அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் அதிக கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் முதன்முதலாக அன்பே சிவம் அமைப்பானது இந்தக்கிராமத்தினை தெரிவு செய்து உலர் உணவுப்பொருட்களை வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இந்தக்கிராமம் தற்போது எந்த தரைவழிப்பாதைகளையும் பயன்படுத்த முடியாமல் பல இன்னல்களை எதிர்நேக்கி வருகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.















அண்மைக்காலமாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள  கிராமங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள துறைவந்தியமேடு எனும் கிராமம் எந்தவிதமான தரைவழிப்பாதைகள் இன்றி நீரினால் சூழப்பட்ட நிலையிலே அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.
இவர்களது போக்குவரத்திற்கு தற்போது வள்ளங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அவர்களது நிலைமை அறிந்து அன்பே சிவம் அமைப்பினுடாக அந்தக்கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை துறைவந்திமேடு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், செயலாளர் புவி, அன்பே சிவம் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.
தற்போது நாட்டிலே பல பகுதிகளிலும் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சொல்லொன்னா துன்பதுயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். அவர்களுக்கான நிவாரணங்களை புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் சில அமைப்புக்கள் மூலம் வழங்கி வருகின்றது.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் அதிக கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் முதன்முதலாக அன்பே சிவம் அமைப்பானது, இந்தக்கிராமத்தினை தெரிவு செய்து உலர் உணவுப்பொருட்களை வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
இந்தக்கிராமம் தற்போது எந்த தரைவழிப்பாதைகளையும் பயன்படுத்த முடியாமல் பல இன்னல்களை எதிர்நேக்கி வருகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmszCRaKagq2.html#sthash.xLLksOmv.dpuf
SHARE

Author: verified_user

0 Comments: