23 Dec 2014

வெள்ள நீர் வழிந்தோட கல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.

SHARE
கமல் - 
முகாம்களில் உள்ள மக்களை ஸ்ரீ.ல.சு.கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்றும் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது. இதனால்  மக்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட் கிழமை காலை 8.30 மணியிலிருந்து இன்று செவ்வாய்க் கிழமை (23) காலை 8.30 மணிவரையில் 59.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி சராசரியாக பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய கடமை நேர பெறுப்பதிகாரி டப்ளியு.எச்.ஏ.எச்.நாளக்க கூறினார்.

இந்நிலையில் உன்னிச்சைக் குளத்தின் 3 வான்கதவுகள் 10 அடி உயரதிலும், நவகிரிக்குளத்தில் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும் திறந்து விடப்பட்டுள்தாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கமைய களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லாறு முகத்துவாரம் நேற்று திங்கட் கிழமை (22) மாலை பொது மக்களின் உதவியுடன் வெட்டப் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ளம் கடலை நோக்கி விரைவாக ஓடி வருவதனையும் அவதானிக் முடிகின்றது.

இருந்த போதிலும்  வெள்ளத்தினால் இடம்பெயந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் நேற்று மாலை பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களின் தேவைகள் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரட் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர நேரில் சென்று கேட்டறிந்துள்ளார்.












SHARE

Author: verified_user

0 Comments: