ஏ.எச்.ஏ. ஹஸைன-
தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐந்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.
தூரப் புறக் கிராமமான கட்டுமுறிவு, ஆண்டான்குளம், தோணிதாட்டமடு, குஞ்சன்குளம் மற்றும் மதுரங்குளம் ஆகிய கிராமங்களே பிரதான நிலப்பரப்பிலிருந்து பயணம் செய்ய முடியாதவாறு ஞாயிற்றுக் கிழமையிலிருந்து சனிக்கிழமை காலை முதல் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதனால் அம்மக்களது இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
தூரப் புறக் கிராமமான கட்டுமுறிவு, ஆண்டான்குளம், தோணிதாட்டமடு, குஞ்சன்குளம் மற்றும் மதுரங்குளம் ஆகிய கிராமங்களே பிரதான நிலப்பரப்பிலிருந்து பயணம் செய்ய முடியாதவாறு ஞாயிற்றுக் கிழமையிலிருந்து சனிக்கிழமை காலை முதல் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதனால் அம்மக்களது இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
கட்டுமுறிவு, மற்றும் ஆண்டான்குளக் கிராமங்களில் 207 குடும்பங்களைச் சேர்ந்த 740 பேரும், தோணிதாட்டமடுவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேரும், குஞ்சங்குளம் மற்றும் மதுரங்குளம் கிராமங்களில் 190 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேரும் தங்களது கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச செலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை, மாவெடியோடை, கிரிமிச்சை, கட்டுமுறிவு ஆகிய கிராமங்களிலிருந்து 587 குடும்பங்களைச் சேர்ந்த 1897 பேர் தமது வீடுகக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில் அந்தந்தக் கிராமங்களிலுள்ள பொதுக் கட்டிடங்களில் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கான உடனடி சமைத்த உணவுகளை படையினர் வழங்கி உதவுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவு ஒட்டு மொத்தத்தில் வெள்ளக்காடாய்க் காட்சியளிப்பதாகவும் இதனால் அப்பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் 6138 குடும்பங்களைச் சேர்ந்த 20709 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment