16 Nov 2014

மகிழடித்தீவு பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நீரிழிவு தின நிகழ்வு

SHARE
(துசா)
மகிழடித்தீவு பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி  திட்ட வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வதேச நீரழிவு தினத்தை சிறப்பித்து நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்  வெள்ளிக்கிழமை டொக்டர் ரி.தவநேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென்மேற்கு பிரதேச சபை கொக்கட்டிச்சோலையில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், , கோட்டக்கல்வி அதிகாரி, வைத்தியர்கள், மகிழடித்தீவு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் பேரணியாக நீரிழிவு தொடர்பான பதாதையுடன், அந்நோய் தொடர்பான விளங்களை, துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டு மகிழடித்தீவு பொது வைத்தியசாலை வரை பேரணி வருகை தந்துதது.
பின் நீரிழிவு நோய்யின் தாக்கம், அறிகுறி, அதனைக்குறைக்கும் வழி, உணவுக்கட்டுப்பாடு தொடர்பான விளங்கங்கள் வைத்தியர்களால் கலந்து கொண்டவர்களுக்கு  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், வைத்திய உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள், வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள், உக்டா நிறுவன உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பொலிஸார் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: