13 Mar 2014

மட்டக்களப்பு- களுமுன்தன்வெளி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா

SHARE

(சக்தி)
மட்டக்களப்பு- களுமுன்தன்வெளி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா நாளை புதன்கிழமை (12) ஆரம்பமாகி எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை  காலை 8 மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக மேற்படி ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
உற்சவகாலங்களில் தினமும் ஸ்நபன கும்ப பூசையும், கூட்டுப் பிரார்தனை நிகழ்வுகளும் விசேட சமயற் சொற்பொழிவுகளும் இடம்பெற்று இரவு 7மணிக்கு மூலாலய பூசையும் 8 மணிக்கு வசந்த மண்;டப பூசையும், இடம்பெற்று தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருதலும் இடம்பெறவுள்ளது.
கிரியைகள் யாவும் உற்சவகால பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ.செ.கு.சுப்பிரமணியம் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெறவள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: