(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான (ஆண், பெண்) வருடாந்த கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 6 கழகங்கள் பங்குபற்றியிருந்தன் இறுதியில் ஆண்கள் அணியில் கோவில்போரதிவு உதயதாரகை விளையாட்டுக்கழகம் 3 இற்கு 2 எனும் விதத்தில் புள்ளி பெற்று முதலிடத்தினையும், களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இத்தினையும் பெற்று வெற்றியீட்டியது.
இந்நிலையில் பெண்கள் பிரிவில் முதலிடத்தினையும் களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணி 3 இற்கு 2 எனும் வித்தில் பெற்று முதலிடத்தினையும்;, கோவில்போரதிவு உதயதாரகை விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணி இரண்டாம் இடததினையும் பெற்றுக்கொண்டது.
0 Comments:
Post a Comment