13 Mar 2014

போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி

SHARE
(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான (ஆண், பெண்) வருடாந்த கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 6 கழகங்கள் பங்குபற்றியிருந்தன் இறுதியில் ஆண்கள் அணியில் கோவில்போரதிவு உதயதாரகை விளையாட்டுக்கழகம்  3 இற்கு 2 எனும் விதத்தில் புள்ளி பெற்று முதலிடத்தினையும், களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இத்தினையும் பெற்று வெற்றியீட்டியது.

இந்நிலையில் பெண்கள் பிரிவில் முதலிடத்தினையும் களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணி 3 இற்கு 2 எனும் வித்தில் பெற்று முதலிடத்தினையும்;, கோவில்போரதிவு உதயதாரகை விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணி இரண்டாம் இடததினையும் பெற்றுக்கொண்டது.










SHARE

Author: verified_user

0 Comments: