13 Mar 2014

SHARE
(சக்தி)
தமிழ் மக்களுக்கு சிறந்த சூழல் தற்போது அமைந்துள்ளது-கருனா அம்மான்.
தமிழ் மக்களுக்கு சிறந்த சூழல் தற்போது அமைந்துள்ளது இதனை பயன்படுத்தி எமது மக்கள் முன்னைய காலகட்டத்தில் இழந்த கல்வி, பொருளாதாரம் என்பனவற்றினை மீண்டும் பெற்று முன்னேற வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதன் அவர்கள் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிய அதிபர் பொன்.வன்னியசிங்கம் தலைமையில் நேற்று செவ்வாய் கிழமை (11) இடம் பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

தற்போது சுறுசுறுப்பாக விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது இதனை நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். கல்வியினை பெற்றுக் கொண்டால் தனாகவே பொருளாதாரம் வளச்சிபெறும் தற்போதைய காலத்தில் இதன் மூலமாகவே தமிழர்களின் இருப்பினை தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

இவ் விழையாட்டுப் போட்டியினை பார்க்கும் போது பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் கூடுதலாகவுள்ளது அதனை எண்ணி நான் சந்தோசம் அடைகின்றேன். இ;ப்பங்களிப்பானது தொடர்ந்து இருக்கு வேண்டும். அப்போதுதான் தங்களின் பிள்ளைகள் கல்வியில் ஓர் சிறந்த இலக்கிiனை நோக்கி பயணித்து அந்த இலக்கினை அடைந்து கொள்வர்கள் அப்போதுதான் எமது சமூகம் முன்னேற்றங்காணும்.

இக்குழந்தைகளின் ஓர் சிறந்த விளையாட்டு விழாவினை கண்டு இன்றைய நாளினை மகிழ்ச்சிகரமான நாளாக கருதுகின்றேன். ஒரு குழந்தை குடும்பத்தில் இருக்கும் போதுதான் குடும்பம் சந்தோசம் அடைகின்றது. ஏழையாக இருக்கலாம் பணக்காரனாக இருக்கலாம் தாயின் வயிற்றில் பிள்ளை இருக்கின்ற போது அப்பிள்ளை சிறந்த முறையில் பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்றுதான் எண்ணுகின்றாள். இதற்காகத்தான் பாடசலையில் ஒப்படைக்கப் படுகின்றது. இதன் போது சிறந்த அற்பணிப்புடன் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் இருந்தும் இன்று பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களைப் பற்றி என்னிடம் பிழையாக கூறுகின்றனர். இதற்காக நான் கூறுவது என்னவென்றால் பாடசாலையை விட பிள்ளை உங்களிடம் தான் கூடுதலாக இருக்கின்றது. எனவே பிள்ளையின் வளர்ச்சியில் கூடுதலான பங்கு பெற்றோர்களிடம்தான் உள்ளது நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே சிறுவர்களுக்கான விளையாட்டுக்களின் அறிமுக விழா இப்பாடசாலையில்  இடம் பெறுவதனையிட்டு இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், ஆசிரியர்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளகின்றேன்.

இப் பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்திற்காக 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாடி கட்டடம் ஒன்றினை அமைப்பதற்காக முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் நிதியினை பெற்றுத்தருவேன் எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்

SHARE

Author: verified_user

0 Comments: