13 Mar 2014

இவ்வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளேன்-யோகேஸ்வரன் எம்.பி

SHARE

இவ்வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளேன். நான் கௌரவமாகப் பிச்சை எடுப்பேன் அவ்வாறு எடுக்கப்படும் பிச்சையில்தான் இவ்வாறாக மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றேன்.

என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று (10) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு விஜயம் செய்து அக்கிராம மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். அதன்போது அக்கிராம மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்குகையில்.

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திருக்கின்றோம் இவ்வருடம் அதனை விட அதிகமான விதவைக் குடும்பங்களுக்கு மிளகாய் அரைக்கும் மில், நல்லின பசுமாடுகள், தையல் இயந்திரங்கள், போன்ற வாழ்வதார உதவிகளைப் புரிவதற்கு வெளிநாடுகளில் நான் கௌரவமாக பிச்சை எடுத்து மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளேன்.

அதுபோல் வறிய மாவணரவ்களின் கற்றலுக்கு உதவுதல், பல்கலைக் கழகங்களில் கற்கும் வறிய மாணவர்களுக்கு உதவுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். ஏற்கனவே மட்டக்களப்பு மாட்ட இந்து இளைஞர் அமைப்பு வறிய நிலையிலுள்ள பல்கலைக் கழகங்களில் கற்கினற்ற 79 மாணவர்களுக்கு மாதாந்தம் உதவி வழங்கி வருகின்றது. எனது தனிப்பட்ட நிதியில் 32 பேருக்கும் உதவி வழங்கி வருகின்றேன். இந்த செயற்பாடுகளை மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளேன்.

எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் செய்யக் கூடிய அனைத்தினையும் செய்யவுள்ளோம். கடந்த கால யுத்த சூழல் காரணமாக அங்கவீனமாக்கப் பட்டவர்களுக்காக கடந்த வருடம் 40 பேருக்கு உதவினோம் அதனை இவ்வருடம் அதனை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளேன். நான் கௌரவமாகப் பிச்சை எடுப்பேன் அவ்வாறு எடுக்கப்படும் பிச்சையில்தான் இவ்வாறாக மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றேன்.

இவை ஒருபுறமிருக்க மிகவிரைவில் பாரியதொரு அச்சறுத்தல் எமக்கு வர இருக்கின்றது. எதிர்வரும் ஏப்பரல் மாதம் திறக்கபட இருக்கின்ற படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான இணைப்புப் பாலமான மண்முனைப்பாலம் திறக்கப்படுவதனால் காத்தான்குடி சிலவேளைகளில் படுவான்கரைக்குள் வரலாம் என்ற அச்சம் வந்துள்ளது.

ஏனெனில் தற்போது அரசாங்கத்திலே இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்மார் எமது படுவான்கரைப் பகுதியிலே காணிகளை வாங்குகின்றார்கள். அதற்கு எமது மக்களும் அவர்களுக்கு விற்பனை செய்யும் தொகையை விட பன்மடங்கு காசு வருகின்றது தானே என நினைத்து அவர்களுக்கு விற்று விடுகின்றார்கள். இதனால் எதிர் காலத்தல் பல பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள நேரிடுவது மாத்திரமின்றி ஒருவகையில் எமது இனத்திற்குத் துரோகம் செய்கின்றவர்களாக மாறிவருகின்றோம் என்பதனையும் மறந்து விடக் கூடாது.

அவ்வாறு எமது பிரதேசத்தினுள் வேறு இனத்தவர்கள் நிரந்தரமாக்கப் படுவார்களேயானால் நாளடைவில் எம்மக்கள் மெல்ல மெல்ல வேறு இனத்திற்கு மாறிவிடுவார்கள்.

இவற்றினால் எமது கலை கலாசாரங்கள் சீரழியும், கால்நடைகள் அதிகளவில் அழிவடையும், எனவே எம்மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
எனவே மண்முனைப் பாலம் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை வைத்துக் கொண்டு எம்மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும் பாதிப்புக்களும் பெரிதாக வரக் காத்திருக்கின்றது. இவற்றில் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊர்ச் சட்டங்களை உருவாக்கி அமுல்ப்படுத்துங்கள். இதனை நாங்கள் செய்ய முடியாது. இல்லாவிட்டால் நாங்கள் சீரழிந்து போய்விடுவோம். காத்தான்குடியில் ஒரு தமிழ் குடும்பமும் இல்லை ஏறாவூர் நகரில் ஒரு தமிழ் குடும்பபமும் இல்லை அதுபோல் ஓட்டமாவடியில் 112 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தனர் அர்கள் தற்போது அங்கு இல்லை அவர்கள் தங்களது காணிகளை விட்டு விட்டு வெளியேறிவிட்டனர். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: