(வரதன்)
மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளுவதற்கான பொதுக்கூட்ட நிகழ்வுஇ பூம்புகாரில் உள்ள லயன்ஸ் கழகத்தின் காரியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்றது.
லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஜே.சுகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை லயன்ஸ் கழக ஆளுனர் சபை உப பொருளாளர் ஜி.பாஸ்கரன் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் செயலாளர் லயன் ஏ.ரவீந்திரன் பொருளாளர் லயன் கலாநிதி எம்.கனகரெட்னம் உட்பட லயன்ஸ் கழக உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.
இங்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய ஐந்து உறுப்பினர்களாக அகிலன் பவுண்டேஷனின் கிழக்குமாகாணப் பணிப்பாளர் வீ.ஆர் மகேந்திரன் சமூகசேவையாளரும் பிரபல வர்த்தகருமான செல்வராஜாஇ தாழங்குடா உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எஸ்.ஜெயபாலன் ஆற்றல்மிகு இளைஞர்களான எஸ்.நிவேதித். எஸ்.டினேஷ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கான இலட்சினைகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன இலங்கை லயன்ஸ் கழக ஆளுனர் சபை உப பொருளாளர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் அனைவரும் சத்திப்பிரமானம் செய்துகொண்டனர். .
மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் எதிர்கால செயற்பாடுகள் வறுமை நிலையில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு செயற்றிட்டங்களை தொடர்பில் விரிவாக இதன்போது ஆராயப்பட்டது.
0 Comments:
Post a Comment