26 Jan 2014

ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்து வருமகின்றது. – (பா.உயோகேஸ்வரன்)

SHARE

(கமல்)  

நாட்டில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்துவரும் நிலைமையில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்புஇ நாட்டின் பிரதான எதிர்க் கட்சியாகும் நிலைமை உருவாகி வருவதாக' கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்புஇ திருப்பளுகாமம் இந்து கலாமன்றத்தின் 35ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே யோகேஸ்வரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்இ 'நான் நினைக்கின்றேன் இன்னும் சொற்ப காலத்திலே ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பவர்கள் கூட அரசாங்கத்தின் பக்கம் தாவுவார்களாக இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக மாறும்' என்றார். 

'அந்த நிலமை ஏற்பாடுமாயிருந்தால் முன்பு அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தது போன்று சம்பந்தன் ஐயா எதிர்க் கட்சித் தலைவராக இருக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகலாம்' என்று யோகேஸ்வரன் எம்.பி மேலும் கூறினார். 

SHARE

Author: verified_user

0 Comments: