5 Oct 2012

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் திறன்கள் மற்றும் புத்தாக்கப் போட்டியின் இறுதி கட்டப் போட்டிகள் ஆரம்பம்.

SHARE

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள திறன்கள் மற்றும் புத்தாக்கப் போட்டி 2012 ஒக்டோபர் மாதத்தில் நடாத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் திறன்கள் போட்டிஇ இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மூன்றாம்நிலை வாழ்க்கைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நடைபெறவுள்ளதோடு புத்தாக்கப்போட்டிஇ இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படவுள்ளது.
இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் எல்லா போட்டியாளர்களும் வயது 17-35 இடையிலானவர்களாக இருக்க வேண்டியதோடு அவர்கள் எல்லோரும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் மற்றும் மூன்றாம்நிலை வாழ்க்கைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட  பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற அல்லது பயிற்சி பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
திறன்கள் போட்டியின் மாகாணமட்ட இறுதிக்கட்ட போட்டிகள் 2012 ஒக்டோபர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு புத்தாக்கப் போட்டியின் இறுதிகட்ட போட்டிகள் 2012 ஒக்டோபர் 03 ஆம் திகதியிலிருந்து இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நாடுபூராக அமைந்துள்ள பயிற்சி நிறுவனங்களில் நடைபெறவுள்ளது.  

SHARE

Author: verified_user

0 Comments: