10 Sept 2023

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணைகளை பகிரங்கப் படுத்த கோரி மட்டக்களப்பில் கண்டன பேரணி.

SHARE

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணைகளை பகிரங்கப் படுத்த கோரி மட்டக்களப்பில் கண்டன பேரணி.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணைகளை பகிரங்கப் படுத்த கோரி குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே உண்மையை உலகறியச்செய் எனும் தொனிப்பொருளில்  கண்டன பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(10.09.2023) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே, உண்மையை உலகறியச்செய், எனும் தொனிப்பொருளில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை பகிரங்கப்படுத்த கோரி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கண்டன பேரணியானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்திலிருந்து கல்லடி பாலம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற இக்கண்ணனப் பேரணியின்போது  சனல்-4 காணொளிக்கு எதிராகவும்குரல் எழுப்பியிருந்தனர். இந்த கண்டன பேரணியின்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தண்  தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்த கண்டன பேரணி ஆர்ப் பாட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

திசை திருப்பாதே, திசை திருப்பாதே, குண்டு தாக்குதலை திசை திருப்பாதே, உண்மையை உலகறிய செய், குறி வைக்காதே குறி வைக்காதே பிள்ளையானை குறி வைக்காதே, தப்பிக்க வைக்காதே, தப்பிக்க வைக்காதே, உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்காதே, உண்மையை உலகறிய செய், துரோகங்கள் எமக்கு புதிதல்ல, சன்னல் 4 ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தாதே, நீதி வேண்டும், நீதி வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றவாறும், கோஷங்களையும் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
































SHARE

Author: verified_user

0 Comments: