14 Dec 2022

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டுமேதவிர தனிப்பட்ட விடையங்களுக்காக நாம் அரசியல் செய்யக்கூடாது – ராணக்கியன்.

SHARE

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டுமேதவிர தனிப்பட்ட விடையங்களுக்காக நாம் அரசியல் செய்யக்கூடாதுராணக்கியன்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையில்லை என பொதுவான கருத்து உள்ளது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யும்போது அதனை விமர்சிக்காமலோ அதனைச் சுட்டிக்காட்டாமலோ இருக்க வேண்டும் என்றால் அந்த ஒற்றுமைக்கு நான் இணங்கமாட்டேன். தமிழ மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் வரும்போது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் அதனை எதிர்க்க வேண்டும்தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டுமேதவிர தனிப்பட்ட விடையங்களுக்காக நாம் அரசியல் செய்யக்கூடாது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்ப மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட  இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக திங்கட்கிழமை(12) தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் விஜயம் செய்திருந்தனர். அவர்களுடன் வெல்லாவெளி பிரதே செயலகத்தில் வைத்து கலந்துரையாடிய பின்னர் வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடிய பின்னிர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

மட்டக்களப்பு மாவட்டம் போரீவுப்பற்றுப் பிரதேசத்தில் 26 இடங்களுக்கு எல்லைக் கற்களை இடுவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச செயலகத்திற்கும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளது. இதில் இன்றயத்தியனம் 3 இடங்களுக்கு எல்லைக் கற்கள் இடுவதாகவும், அடுத்து வரும் 15 நாட்களுக்குள் ஏனைய இடங்களுக்கும் எல்லைக் கற்களை இடுவதாகவம், அறிய முடிந்தது. தமது பூர்வீக வழிபாட்டுத்தலங்களில் எல்லைக் கற்கள் இடுவதை மக்கள் இதன்போது எதிர்த்துள்ளார்கள்.

இதற்காக தொல்லியல் திணைக்களத்தின் அம்பாறை காரியாலயத்திலிருந்து, பண்டார எனும் அதிகாரி ஒருவரும், மேலும் 2 அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களும் வருகை தந்திருந்தனர்.

அவர்களின் தவல்களுக்குமைய 10 தொடக்கம் 15 இலெட்சம் ரூபாய் நிதி இப்பகுதிக்கு எல்லைக் கற்கள் இடுவதங்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இவ்வருடம் முடிவதற்குள் இந்த நிதியை செலவு செய்ய வேண்டும் என மேலிடத்திலிருந்து பெரிய அழுத்தம் இருப்பதாக வருகை தந்த அதிகாரி தெரிவித்தார். இதனை நாம் அனுமதிக்க முடியாது. தொல்பொருள் என்பதை இலங்கையில் பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்களும் இணங்குகின்றோம் ஆனால் தொல்பொருள் என்ற பேர்வையில் சிங்கள மயமாககலையும், அபகரிப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றோம். குருந்தூர் மலையிலே தொல்கொருள் என்ற போர்வையில் புதிதாக கட்டடங்களைக் கட்டி பௌத்த மயமாக்கலுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொலன்நறுகையிலே தொல்லியல் பிரதேசத்திலே சிவன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. குரூந்தூர் மலையிலே பௌத்த விகாரை கட்டமுடியும் என்றால் ஏன் பொலன்நறுiயில் உள்ள சிவன் ஆலயத்தை கட்டியெழுப்ப முடியாது? எனவே தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் காணிகளைப் பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். என்பதையும் சுட்டிக்காட்டி இப்பிரதேசத்திற்குரிய தொல்லியல் திணைக்கள அதிகாரியிடம் பேசி அந்த  15 இலெட்சம் ரூபாய் இந்த மாவட்டத்திற்கு வேண்டாம், என தெரிவித்துள்ளோம். அதற்கு அவர்களும் இணங்கியுள்ளார்கள். எதிவரும் தைப் பொங்கலுக்குப் பின்னர் அப்பகுதி மக்களிடமும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் எனக் கூறி அவர்களை அனுப்பியுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குளினால் தெரிவு செய்யப்பட்டவர்களும்கூட தொல்லியல் திணைக்களத்திற்கு ஆதரவாக செயற்படுவதானது கவலையான விடையமாகும். இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தெற்கினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் விதுரமிக்கிரம நாயக்க போன்றோரின் இனவாத அரசியலுக்காக எமது மாட்டத்திலும் ஒன்றாக இராஜாங்க அமைச்சர்களாக பயணிக்கின்றவர்கள் செயற்படுவது மிகக் கவலையான விடையமாகும்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையில்லை என பொதுவான கருத்து உள்ளது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யும்போது அதனை விமர்சிக்காமலோ அதனைச் சுட்டிக்காட்டாமலோ இருக்க வேண்டும் என்றால் அந்த ஒற்றுமைக்கு நான் இணங்கமாட்டேன். தமிழ மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் வரும்போது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் அதனை எதிர்க்க வேண்டும்.  தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டுமேதவிர தனிப்பட்ட விடையங்களுக்காக நாம் அரசியல் செய்யக்கூடாது.

கிழக்கை மீட்கப்போகின்றோம் என புறப்பட்டவர்கள் தற்போதைக்கு இவ்விடத்தில் இணைந்துள்ளார்கள். மாற்றங்கள் வந்து கொண்டுள்ளன.  இதனை மக்களும் தேர்தல் காலங்களிலும் ஆழமாக பதிந்து வைத்திருக்க வேண்டும். எமது மாவட்டத்திலுள்ள ஒரு சில பிரதிநிதிகள் எமது மாவட்ட மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள். நாம் மக்களுக்காக செயற்படுகின்போது வழக்குகளைச சந்திக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: