14 Dec 2021

சரிந்து முறிந்த பாரிய ஆலமரம்.

SHARE

சரிந்து முறிந்த பாரிய ஆலமரம்.

மட்டக்களப்பு மாவட்டம் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குப்பட்ட களுவாஞ்சிகுடி தேவாலய வீதியில் நின்ற பாரிய ஆலமரம் ஒன்று திங்கட்கிழமை(13) பெய்த பலத்த மழைகாரணமாக சரிந்து விழுந்து முறிந்துள்ளது.

மிகவும் பழமைவாய்ந்த இந்த ஆலமரம் சரிந்து முறிந்துள்ளதனால் அருகில நின்ற மூன்று பனைமரங்களுக்கும் சேதம் ஏற்பட்டு முறிந்துள்ளன. எனினும், இந்த மரங்கள் முறிந்ததனால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.         















    

SHARE

Author: verified_user

0 Comments: