6 Mar 2021

உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்தி எனும் திட்டத்தின் கீழ் வெல்லாவெளியில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.

SHARE

உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்தி எனும் திட்டத்தின் கீழ்  வெல்லாவெளியில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 5 வீடுகள் அமைக்கும் திட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் முதலாவது வீட்டிற்கான அடிக்கல்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களா சங்கர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் வெல்லாவெளி அமைப்பாளர் சிவபதம் தயானந்தன் ஆகியோரால் நடப்பட்டன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு மற்றும் வறுமை ஒழிப்பு சிந்தனைக்கு அமைவாக  உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்தி என்கின்ற திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் 5 வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்  நடப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: