29 Jan 2021

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

SHARE

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நழலையப் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரவித்துள்ளதாவது

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். என அவர மேலும் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: