மகாத்மா காந்தியின் 72 வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு.
உலகிற்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 72வது சிரார்த்த தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பில் காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியடிகளாரின் 72 வது சிரார்த்த தின நிகழ்வுகள் சனிக்கிழமை(30) நடைபெற்றது.
இதனையொட்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலையருகில் நிகழ்வுகள் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி.அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்ட காந்தி சேவாசங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தி, ரகுபதிராம் பாடல் இசைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment