31 Jan 2021

காத்தான்குடியில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிப்பு 3 பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்.

SHARE

காத்தான்குடியில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிப்பு 3 பிரிவுகள் தொடர்ந்தும்  தனிமைப்படுத்தல் அமுல்.

கடந்த ஒரு மாதகாலமாய் அமுலில் இருக்கும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலலுள்ள 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 30ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்தது.கடந்த 22ம் திகதி 8 கிராம சேவகர் பிரிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.

தொடர்ந்து 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த நிலையில் 167 167E 167 C ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தவிர ஏனைய 7 பிரிவுகளிலும் ஞாயிற்றுக்கிழமை (31)  முதல் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டதால் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்படிருந்தன.வாகன போக்குவரத்துகளும் இடம்பெற்றன.

விடுவிக்கப்பட்ட  பகுதிகளிலும் பொதுச் சந்தைகள் பாடசாலைகள் மத்ரசாக்கள் பள்ளிவாயல்கள் பாலர் பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்குமெனவும் சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.











SHARE

Author: verified_user

0 Comments: