20 Dec 2020

கடற்றொழில் திணைக்கள மட்டு.மாவட்ட கட்டிடத்தில் பாரிய தீ பரவல் கட்டிடம் எரிந்து நாசம்.

SHARE

கடற்றொழில் திணைக்கள மட்டு.மாவட்ட கட்டிடத்தில் பாரிய தீ பரவல் கட்டிடம் எரிந்து நாசம்.

கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த கட்டிடம் கடற்றொழில் திணைக்களத்தின்  ஐஸ் தொழிறசாலை பகுதியாகும். இக்கட்டிடத்தின் ஒரு பகுதியே தீ பரவலால் எரிந்து நாசமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும்படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிசாரும் படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மாநகர மேயர் ரி.சரவணபவன் மாநகர ஆணையாளர் எஜ்.தயாபரன் உள்ளிட்ட அதிகாரிகளும் குறித்த தீ வபத்து பகுதிக்கு விஜயம் செய்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 














SHARE

Author: verified_user

0 Comments: