22 Nov 2020

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.

SHARE

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.

வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் மட்.பட்.பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசிகரன் அபிஷனன் எனும் மாணவன் 192 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தையும், மாட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

எருவில் கிராமத்தைச் சேர்ந்த இவர் எருவல் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகரும், சமூக சேவகருமான வசிகரன் யோகநிதி தம்பதிகளின் புதல்வராவார். இவரை அதிபர், ஆசிரியர்கள், கல்வின் சமூகத்தினர், உள்ளிட்ட பலரும் பாராட்டிக் கௌரவித்துள்ளனர். இந்நிலையில் மாணவனுக்கு கற்பித்த ஆசிரியருக்கும், அதிபருக்கும், மாணவன், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் நன்றியறிதலைத் தெரிவித்துள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: